Monday, March 27, 2006

பருக்கையின் உருவாக்கம்

- ஜே.எழில் இளங்கோ -
மதுரை காமராஜர் பல்கலைக் கழக, இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் மாணவர்களால் உருவாக்கப்பட்ட குறும்படம் தான் பருக்கை. 7 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் 2005ஆம் ஆண்டிற்கான ஜெயா டிவியின் “டாக்கு அவார்ட்ஸ்” விருதுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இயக்குனர் திரு.வசந்த் அவர்களின் விமர்சனத்துடன் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. இப்படைப்பின் உருவாக்கத்திற்கு, ஊக்கமும், முழு சுதந்திரமும் அளித்த எங்கள் துறைத் தலைவி திருமிகு சாந்தா அவர்களுக்கும், ஆசிரியை திருமிகு. செந்திலாதேவி மற்றும் திருமிகு மோனிகா அவர்களுக்கும் நன்றியை சமர்ப்பிக்கின்றேன். பருக்கையின் அனுபவங்களை, அதன் இயக்குனர் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.“சினிமா” எனும் கனவுத் தொழிற்சாலையில் வாய்ப்புக் கிடைக்க, தினம் தினம் செத்துப் பிழைக்கும் கலைஞர்கள் ஒருபக்கம். வாய்ப்புக் கிட்டினாலும் வெற்றிக்காக எதிர்நீச்சல் அடிப்பவர்கள் மறுபக்கம். இவற்றிற்கு எல்லாம் அடிப்படைக் காரணம், சினிமா எனும் போதைக்கு இக்கலைஞர்கள் தம்மை அடிமையாக்கிக் கொண்டனர் என்பதே! அப்படிப்பட்ட சினிமா எனும் போதைக்கு அடிமையானவர்களுள் ஒருவன்தான் நான். சரித்திரம் படைக்க வேண்டுமென்ற இலக்குடன், கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நான் பழகிய இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள், மூலம்; நான் கற்ற சினிமாவின் தொழில்நுட்பத்தை (ஏதோ ஓரளவு) எனது அனுபவம், ரசனை ஆகியவற்றின் கலவை கொண்டு, பருக்கை எனும் படைப்பினை கலைஉலகிற்கு சமர்ப்பித்தேன்.கரு உருவான விதம்எவ்வளவோ சமூகக் கருத்துக்கள் பல இயக்குனர்களால் சொல்லப்பட்டு இருந்தாலும், புதிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்ற ஆர்வம்தான் பருக்கைக்கு ஊன்றுகோலாய் இருந்தது. பள்ளி நாட்களில் நான் மதியஉணவு இடைவெளியில், அவசரம் அவசரமாக உணவு உண்டுவிட்டு மிஞ்சிய உணவை ஒரு பெரிய கூடையில் கொட்டுவது வழக்கம்.(ஊர் சுற்றுவதற்கும், சண்டை போடுவதற்கும்தான் இந்த அவசரம்) பள்ளிக்கூட வாசலில் மிட்டாய், குச்சிஐஸ் விற்பவர்களுடன் பேசிப் பழகிய நாட்களில்தான் ஒரு பிச்சைக்காரனின் நட்பு எனக்குக் கிடைத்தது. பள்ளியின் குப்பைக் கூடையில் கொட்டிக்கிடக்கும் மிஞ்சிய உணவுகள்தான் இவனுக்கும், இவன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தினசரி உணவு. சிறுவயதில் பாதித்த, உள்வாங்கிய இச்சம்பவம்தான் பல வருடங்கழித்து எனது மூளையின் நினைவுகளை தட்டி எழுப்பி விட்டது.திரைக்கதையாக்கிய விதம் பொதுவான ஆவணப் படங்களில் வசனம், காட்சி இவற்றைத் திரைக்கதையில் எழுத்து வடிவில் கொள்வது வழக்கம். ஆனால் பருக்கையில் எந்த வசனமும், இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். (சில தவிர்க்க முடியாதக் காரணங்களினால் ஒரிரு வசனங்கள் மட்டுமே இறுதியில் சேர்க்கப்பட்டது.) அடிப்படையில் தமிழில் வரும் வியாபார சினிமாக்களை ரசிக்காத நான், யதார்த்தமான சினிமாக்களை ரசிக்கும் தீவிர ரசிகனாக இருந்தேன். அதன் பாதிப்பில்தான் இதன் திரைக்கதையை உருவாக்கினேன்.காட்சியாக்கிய விதம்காட்சிகளை யதார்த்தமாகக் காட்ட, கிடைக்கின்ற வெளிச்சம்(யுஎயடையடிடந டுiபாவ); மூலம், காட்சியாக்க வேண்டிய இடங்களுக்கு நேரில் சென்று தத்ரூபமாக எடுக்க வேண்டியக் கட்டாயத்தைப் பருக்கைக்கு இலக்காக்கிக் கொண்டேன். அதிகப்படியானோர் ஷ_ட்டிங் தளத்தில் இருந்தால், மக்களின் கவனம் திசை திரும்பி வடும் என்பதால் ஆட்கள் குறைக்கப்பட்டனர். சில காட்சிகள் மிகவும் கவனமாகக் கையாளப்பட்டன. (குறிப்பாக, மதுரை நீதிமன்றம் எதிரில் இருக்கும் பரபரப்பான இடத்தில், ஒரு பிச்சைக்காரனையும், பிச்சைக்காரியையும் குப்பைகள் கொட்டிய குவியலுக்குள் வைத்து எடுக்கும் காட்சி) மக்கள் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அங்கு பரபரப்பும் அதிகமாகியது. இருந்தபோதும் ஷாட் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. 10, 20 டேக்குகளுக்கு மேல் எடுத்துக் கொண்டேன். இவ்வாறு ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் திட்டமிட்டு எடுத்தோம்.முடிவுக்காக அலைந்தது....மக்களுக்கு உணர்த்த வேண்டிய சமூகக் கருத்துக்கள் பல இருந்தாலும், உணவு வீணாக்கலை அழுத்தமான முடிவு கொண்டுதான் உணர்த்த முடியும் எனக் கருதி, படக்குழுவினருடன் 15 நாட்கள் இரவு பகலாக விவாதம் செய்தோம். நல்ல முடிவு கிடைக்க வில்லை. பின்னர் பல நாட்கள் தவங்கிடந்து, மூளையைக் கசக்கிப் பிழிந்து கிடைத்ததுதான் பருக்கையின் முடிவு...அது... மாட்டின் சாணம் கூட மனிதனுக்கு எருவாகப் பயன்படுகிறது. ஆனால் மனிதன் வீணாக்கும் உணவு....? எதிர்பாருங்கள்! ஐயாடிவியில் மீண்டும் பருக்கையை......!

மெகா சீரியல்

- க.பொன்ராஜ் -

மெகா சீரியல் - கேட்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு சந்தோஷத்தையும் (உற்று நோக்க: சந்தோஷம் கேட்கும் போது தான், சீரியல் பார்க்கும் போது அல்ல) ஆண்களுக்கு (சில கண்ணீர் பார்ட்டிகள் தவிர்த்து) கடுப்பையும் தரவல்ல பலே வார்த்தை இது.சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘விழுதுகள் தொடர்தான் மெகாசீரியல் உலகின் ஆதாம் ஏவாளாக கருதப்படுகிறது. தொடர்ந்து வந்த கேபிள் புரட்சியில் இந்த ஆதாம் ஏவாள் சந்ததி இந்திய மக்கள் தொகையோடு போட்டி போடுவது போல் பல்கிப் பெருகிவிட்டது.விளைவு, பல சேனல்களிலும் சேர்த்து நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களை (தினமும்) பிடித்து கண்ணீர் தேசத்தில் செங்கோலாட்சி (ஆண்களின் பார்வையில் கொடுங்லோட்சி) நடத்தி வருகிறது இந்த மெ.மு.க. (அதாங்க... மெகாசீரியல் முன்னேற்றக் கழகம்.)ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் பொழுதுபோக்கு உலகம்; மிகவும் சிறியது. அதுதான் வரவேற்பறைக்கே வந்து பெட்டிச்சாத்தான் தந்த சீரியல் ஆப்பிளை ஏவாளாய் பெண்கள் விழுங்கியதற்குக் காரணம். பிரிதொரு காரணம், பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்பட வழிவகுக்கிற உறவுகளே மெகாசீரியலின் மையக் கரு என்ற அங்கீகரிக்கப்படத விதி. (எங்கள் தவைவிதியும் அதுதான் என ஆன்டி-மெகாசீயல் பார்ட்டிகள் புலம்பும் சத்தம் கேட்கிறது.)இனி மெகாசீரியலின் ‘உட்டாலக்கடி’ வேலைகள். தமிழ் சேனல்களில் நாளொன்றுக்கு 40 க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாவதில் ஒவ்வொன்றும் தலா 30 நிமிடம் ஒளிபரப்பவதாக உங்கள் காதில் பூ சுற்றப்படுகிறது. (அதுதான் அவங்களோட பிழைப்ப+). உண்மையில் தினமும் காதுகளை பதம்பார்க்கும் டைட்டில் பாடலும், விளம்பரங்களுமே குறைந்த பட்சம் 12 நிமிடங்களை தின்று விடுகின்றன. மீதமுள்ள 18 நிமிடங்களில் அதிகமாய் போனால் ஆறு காட்சிகள். இந்த ஆறு காட்சிகளில் நீங்கள் ஏழு முறை அழுது முடிப்பதற்குள் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களின் கல்லாவில் விழும் என்பது உங்களுக்குத் தெரியுமா?உதாரணமாக 500 நாட்களில் 250 மணி நேரம் (அதாவது 15,000 நிமிடங்கள்) ஒளிபரப்பாகும் மெகாசீரியல்கள் உண்மையில் 150 மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகிறது. அதாவது வெறும் ஆறு முழு நாட்களில் முடிந்து விடக் கூடிய சீரியல் இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டு உங்கள் பொன்னான நேரத்தை கவரிங் ; நேரமாக மாற்றுகிறது.நீங்கள் நாளொன்றுக்கு குறைந்தது நான்கு மெகாசீரியல்கள் பார்க்கிரீர்கள் என்றால் மேற்கூறிய முறைப்படி கூட்டிக் கழித்துப் பாருங்கள். உங்களை நீங்களே கன்னத்தில் அறைந்து கொள்வீர்கள்.அடுத்ததாக இந்த சீரியல்கள் உறவுகளை மேம்படுத்தல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் என கற்றுக் கொடுத்தாலாவது புண்ணியமாய் போகும். ஆனால் சூழ்ச்சி, பொறாமை, சதி, பழிவாங்கல் என சாத்தானின் வேதங்களையே ஓதுகின்றன. இதையெல்லாம் சீரியஸாக உள்வாங்கிக் கொள்ளும் பெண்களின் மனம் ஏதேனும் குடும்ப பிரச்சனை எனில் அதனை சீரியல் நிகழ்வோடு பொருத்திப் பார்த்து குழம்பி மனச் சிதைவுக்கு ஆளாவதுதான் பரிதாபம்.மகனுக்கு கிரிக்கெட், அம்மாவுக்கு சீரியல் என சில வீடுகளில் முட்டிக் கொள்ளும் போது ரிமோட் சிதறு தேங்காய் ஆவதுமுண்டு. இதனால் தேவையற்ற மனப் புகைச்சல் உண்டாவதுமுண்டு.குறிப்பாக படிக்கின்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களுக்கென தனியறை ஒதுக்கிக் கொடுத்து விட்டு கொட்ட கொட்ட நாம் சீரியல் பார்த்தால் குழந்தைகளுக்கும் டி.வி. பெட்டியில் தான் நாட்டம் வரும். விளைவு மதிப்பெண் குறைவு. மதிப்பெண் குறைந்தால் குழந்தைகளை குற்றவாளி ரேஞ்சுக்கு நிற்க வைத்து ‘டோஸ்‘ விடும் நாம் தவறு நம் பக்கம் இருப்பதை உணர்வதில்லை. நூலைப் போலத்தானே சேலையும் இருக்கும். இந்தச் சூழலில் குழந்தைகள் வளர்ந்தால் தலைமுறை இடைவெளி தவிர்க்க முடியாது போய்விடுகிறது. இதையெல்லாம் விடக் கொடூரம் என்னவெனில், துன்பகரமான சீரியல் நிகழ்வைப் பார்த்து சிலர் கண்கலங்கி விடுவதுதான். சீரியல் ஒரு மாயை என்பதைக் கூட உணர முடியாத இப்படிப்பட்ட வடிகட்டிய முட்டாள்கள் மனநோயாளிகளாகக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதுதான் மெகா சீரியல் அரக்கனின் வீரியம் குறித்து விடப்பட்டுள்ள எச்சரிக்கை.இன்னொரு சீரியஸான விஷயம், சித்தி, மெட்டிஒலி என இரண்டு ‘சூப்பர் ராக்கெட் விட்டு மெகாசீரியல் உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறனுக்கு பிடிக்காத ஒரே புரொக்ராம்... கரெக்ட்... மெகாசீரியல்தான். இதை அவரே ஒரு வாரஇதழுக்கான பேட்டியில் கூறி இருக்கிறார். இது எப்படி இருக்கு?

Albert Einstein and the International year of physics 2005

- SG Nehru Nagarajan -

“Science is a powerful instrument. How it is used, whether it is a blessing or a cure to mankind, depends on mankind and not on the instrument. A knife is useful but it can also kill”. –Albert Einstein.
2005 is the 100th anniversary of Albert Einstein-“Miraculous year.” In 1905 he published two seminar papers describing ideas that have since influenced all of modern physics: “the Photo electric effect,” and the paper on “Brownian motion.” In Germany several major scientific out reach events are planned for the “Einstein Year” and the United Nations declared 2005 the year of physics.
Albert Einstein was one of the greatest minds in the world history. Einstein is known as brilliant physicist who contributed more to the scientific world than any other person. His theories on relativity paved the way for how science currently views time, space, energy and gravity. Einstein was so advanced in his thinking that his studies and work set the standard for the control of scientific energy and space exploration currently being studied in the field of astrophysics.
Albert Einstein ranks as one of the greatest people for his contributions towards physics and his part as a philosopher of science and as a humanitarian. And like so many other great people in history, he was criticized and even threatened with death for his belief and convictions. Even up to his final days, the genius continued his search for laws that would explain more of the universe.
In 29,November 1999 a survey was conducted among 100 of today’s leading physicists. Albert Einstein has been voted as The Greatest Physicist of all time. Sir Isaac Newton was elected as second.
Albert Einstein allowed his brain to be studied after his death. Einstein’s brain must be smarter than the rest of all. Now, scientists have found that one part of his brain was physically extraordinary. In the study conducted by the overall anatomy of Einstein’s brain, scientist Mc. Master University in Ontario, Canada discovered that the part of the brain thought to be related to Mathematical reasoning- the inferior parietal region was 15 percent wider on both sides than normal.
Thus Albert Einstein says that “There are two ways to live your life
One is as though nothing is miracle
The other is as if everything is”.

The Inscrutable Kalikesam

- M Sumith -

Kalikesam and neighbouring Vattaparai falls are some miraculous sites in Bhoothapandi village of Kanyakumari district, the southern cape of Indian sub-continent. Kalikesam is an ever fascinating place for picnic lovers. It helps the people to spend their holidays for refreshment and enjoyment.
Kalikesam is unique in that it is a conjuction of terrestrial and aquatic ecosystem-the shola forest where the trees are evergreen, the main forest and the marshy swamps. Inside the deep and thick area, we can see the abundance of God’s blessings which are breath taking. The peace and calmness of the forest makes the viewers astonished. As we drive in to the interior of Kalikesam fall, the air is thick. The whole breeze acts as a balm while the bubbling sound of natural springs is a music to the ears. The place gets plenty of rainfall and enjoys pleasant weather round the year.
The fall is surrounded by forest on all sides and forms part of an active animal corridor. The long stream is pollution-free and adds to the natural charm of the place. Unlike the Tripparappu fall, which has become a typical tourist spot,here people are allowed to take ‘natural bath’. The place is depicted by spectacular flora and fauna. Apart from assorted flora and fauna, the region has grown in to a bird watcher’s heaven. The surrounding rocks, the pebbles inside the stream and the sunlight penetrating through the cleaves of dark green trees give everyone the feeling that” we have reached the eternity. ”
It is believed that the water from the fall has some medicinal effects. The tourists who visit here have a variety of choices from the virtue of natural untouched places. Kalikesam has a serpantine beauty which never lost the people’s attention.
There is a small temple, next to the fall. They used to worship the idol of ‘Goddess Kali.’ The very name Kalikesam expresses this. People need not take arduous journey to reach Kalikesam since the road is motorable.
On the way to Kalikesam, there is another eye-catching sight. It is Vattaparai fall. This place also makes the visitors amazed. People can reach this place without any difficulty.It is 35 kilometer away from Kanyakumari. The water from Kalikesam continuously flows through Vattaparai and makes the viewers happy.
With strict”no littering and noise” instructions, a trip to Kalikesam is like paying homage to nature nature. One can never see this place as empty. As the years have passed, Kalikesam became more and more famous. Most of the visitors are youngsters. They used to gather here to drink alcohol. It becomes a conspicuous hindrance to other visitors. For preventing such problems, the government has formed a check post at Bhoothapandi, the entrance to the forest. Nobody can trespass in the forest, after the protection has been made. Only after checking, people can go inside.
No visitor has returned in the tourism history of Kalikesam, without remarking about this kind blessing of God almighty. The visitors comment Kalikesam is a” gift of God”.

Thursday, February 9, 2006

Why don’t the women react?

- VK Anushree -
We are living in Manu’s country. Manu, as we all know rejected freedom for women in any phase of her life (Na stree swathantriyam arhiti-Manu Smriti). When these great rulers tried to kill her identity, some parents are trying to kill their girl-child. The girl-children have to fight for the right to be born-let alone the right to expression.Indian society is highly patriarchal. The head of the family and so also the decision-taker is the male-member. When it comes to important decisions regarding the life of the girl-child (she is a member of the family), the decision is used to be taken by a male. First, he decides whether she would be born or not. Regarding education and marriage, the female society is completely and perfectly voiceless. She cannot choose the right course for study and the right person to marry. All decisions come from others and she will be kept silent although the trend shows some changes now a days.Our society as a whole does not want a woman to express herself boldly. How many controversies we have seen in recent times? It is in our country, people burnt Tazlima Nazrine’s ‘Lajja’. Films like ‘Fire’ and ‘Water’ had been banned even before the first show. Even Sania Mirza’s dress code has been questioned. Above all, for how many years we have been trying to get 33% seat reservation for women in the Indian Parliament?Now, let us consider another dimension of the problem. Here, who is the enemy of the women? The society, the male counterparts or they themselves? There is no meaning in abusing others. Most of the time, we have to admit that we are our own enemies.Women are always ready to obey male instructions; not to question them. First, we must learn to analyse what we are told. For centuries, we have been obeying and obeying others. We are living in rigid framework which we ourselves do not want to break. That is why when a Kushboo or any other woman say her opinion in public boldly we the women become aggressive.Indian woman’s life is mainly based on her family. She had a security feeling when she is under the protection of her family. She does not want to mar her safety and security by coming to the forefront to react. She is really afraid of “freedom”. She is not prepared to sacrifice the smooth-going life. We do not want to face any problem.But, as we look back, the human race has gained nothing without facing oppositions. Let us consider our freedom struggle for example. It was not a cake-walk. Why cannot we, the women face some problems to earn a more dignified way of living; to earn our right to say what is in our mind? We must take the initiative here. We cannot expect our male counterparts to do everything for us.

Racks and Ruins in train journey

- Sumeet -
Usually, train journeys are said to be very homely. Amenities like latrine and food make the passengers feel comfortable. Travelling through train is quite convenient for long journeys. These facilities make us feel at home in reserved compartments. Mostly long travelers prefer reserved compartments because they can sleep and sit pleasantly in train than bus. The decrease in ticket rate caused a remarkable hike in the number of passengers.Both facilities and disturbances in train increasing proportionately. Interference, have been crucial while traveling in train. The passengers have to face a variety of problems during their journey. Disruption are getting increased both in reserved and in unreserved compartments. People face decisive problems like Gambling, Drinking, Littering,Commotion etc inside the bays.Gambling, a form of organized game, may be a timepass for the travelers, But, the proportions it is being played now a days are alarming. “Ecstasy and timepass” we feel, while playing, says a passenger. It is fatally evolving in to a social problem. Gambling in all trains almost has led to violence and problems. People bet their money on numbers for fun. Even women take part in gambling. It is prohibited under Gambling Act of 1867 and is a minor offence and a punishable crime. Our police personnel are very vigilant in raiding local places. But, in case of train, they are lazy. Even the Railway Police Force (RPF) is ineffective where gambling is considered. The maximum punishment is a fine of Rs 500 to 1,000 and imprisonment. The railway authorities are not coming forward to act against such crimes.The ordinary travelers cannot cope up with such situations. Like Gambling, there are other problems like littering and commotion. Travellers usually don’t keep the latrines clean. It challenges the health of the passengers. Our “Health and Hygiene” remain as a question in our country. It may cause some disease.Theft and Robbery are increasing in our trains, especially in reserved bogies. Usually, people traveling in reserved cabins need rest and sleep. But, some make use of such opportunities. This problem is very critical in ladies compartment also. Women are involving in such crimes. This becomes a great mystery for the passengers.Whether the women are safe in the train? Definitely, they are not. Because crimes like sexual harassment and molestation are taking place in trains. Many rape cases are reported in the past years. A recent event in Mumbai stated that a 20-yrs-old woman was allegedly raped by a young man while she was traveling with her family. These happenings questioned the chastity of women community.The government must direct the police to act accordingly against such crimes. So that justice prevails and the perpetrators of such heinous crimes were punished.

மரணதண்டனை வேண்டுமா?

சென்ற வாரம் உலகையே சர்ச்சைக்குள்ளாக்கிய விஷயம் ஆஸ்திரேலியர் ஒருவர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூயொண்டு வோங் வான், 25 வயதான இளைஞர் போதை பொருளைக் கடத்தினார் என்று சிங்கப்பூர் அரசு செய்தது, சிங்கப்பூரில் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கும். போதை பொருள் கடத்தி வந்ததற்காக மரண தண்டனை சிங்கப்பூர் அரசு அளித்தது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசும், மக்களும் இதை எதிர்த்தனர். உலகளாவிய சமுக இயக்கங்களும், மனித உரிமை சங்கத்தினர்களும் தண்டனையை குறைக்கும்படி சிங்கப்பூர் அரசை கேட்டு கொண்டார்கள். சிங்கப்பூர் பிரதமரிடம் கருணை மனுவை வோங் வான் குடும்பத்தினர் அளித்தனர். வோங் வானின் தண்டனையை குறைக்கும்படி அம்மனுவில் கேட்டு கொண்டனர். ஆனால் அந்நாட்டு பிரதமர் கருணை மனுவை நிராகரித்துவிட்டார். இதனால் வோங் வானின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து மனித உரிமை சங்கத்தினரும், எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. வோங் வான் குறிப்பிட்ட நேரத்தில் தூக்கிலிடப்பட்டார். ஆஸ்திரேலிய அரசு வக்கீல் பிலிப்ருடோக் இந்த மரண தண்டனையை காட்டு மிராண்டி தனம் என்று கண்டித்துள்ளார். சுற்றுலா நாடான சிங்கப்பூர் அரசின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.மரண தண்டனைக்கு எதிராக குரல்கள் இன்றல்ல, சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே ஓங்கி ஒலித்தது. தண்டனை என்பது மனிதனை சீர்திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கோடு இருக்க கூடாது. பொதுவாகவே மரணதண்டனை கொலை குற்றம் புரிபவர்களுக்கு அளிக்கப்படும். ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகுமா? என்பது தான் நம் கேள்வி. மரண தண்டனையால் குற்றவாளிகள் சீர்திருத்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. 27 நாடுகளில் சட்டப்படி ஒழிக்கப்படாவில்லையென்றாலும் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை தரப்படுவது இல்லை. அமெரிக்காவில் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரணதண்டனையை எதிர்த்து எழுதிய ‘தி கில்லடின்’ எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அகிம்சையைக் கொள்கையாகக் கொண்டு விடுதலை பெற்று தந்த காந்தியடிகள் பிறந்த நம் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கபடவில்லை. பிறர் உயிர்களை நேசிக்கும்படி உலகத்துக்கே எடுத்துக் கூறிய புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் நம் நாட்டில் தான் பிறந்துள்ளனர் 1980ல் மரண தண்டனைக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டுபூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய விவாதமும், எதிர்ப்பும் நடைபெற்றது. பின்னர் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. உச்ச நீதிமன்றம் இந்த 26 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்தது நிதிமன்றமே மரண தண்டனை வித்தாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் நம் நாட்டில் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.இந்தாண்டு அக்டோபர் 17ஆம் நாள் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப் பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கோப்பு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் இக்கோப்பு ஜனாதிபதி அப்துல்கலாம் அதை மீண்டும் நிராகரித்தார். குற்றவாளியின் நடத்தை, குடும்ப பின்னனி அவர்களுடைய வயது உடல்நிலை போன்றவைகளை ஆய்வு செய்துஇந்தஉலகில் வாழும் எஞ்சிய நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வாழ வழிவிட வேண்டும் என்று நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.மரணதண்டனைக்கு எதிராக உலகளவில் விவாதம் நடைபெற வேண்டும். மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

Sunday, February 5, 2006

துள்ளுவதும் இளமை - வெல்லுவதும் இளமை

- நேரு நாகராஜன் -

மனித வாழ்க்கையின் முக்கியப் பருவம் இளமைப் பருவம். இப்பருவம் அளப்பரிய ஆற்றலைத் தன்னகத்தே கெண்டுள்ளது. இவ்வாற்றல் பிறப்பிலேயே கொடுக்கப்பட்ட இலவசக் கொடை, இவ்வாற்றலை அறிவியல் பூர்வமாகத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்பபடுத்துகின்ற இளைஞர்கள் வாழ்விலும், சமூகத்திலும் வெற்றி காணப்hர்கள். இந்த வெற்றி காண்கின்ற வரிசையில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள் பலர் இல்லை என்பது வரலாறு தரும் வருத்தமான சான்று. இளமைப் பருவம் என்றாலே துள்ளித திரியும், ஆடிப்பாடி மகிழும் கூடிவந்து கும்மாளமிடும், தடுமாற வைக்கும், தடம்மாறிப்போகத் தூண்டும், புதுத்தடங்களையும் பதிக்கும், தன்னை உருவாக்கும், பிறருககு உருவம் கொடுக்கும் பருவம் இளமைப் பருவம். ஒரு நாட்டின் மனித வள மேம்பாடு என்பது பெரும்பாலும் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தையும் திறனையும், பொறுத்தே அமையும். இவ்வுண்மையை உணராத இன்றைய இளைஞர்கள் தம்மையே தமக்குள் தொலைத்து விட்டு, வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சாதிக்கும் திறனிருந்தும் அதைச் சோதிக்கும் முயற்சி துளி கூட இல்லை. வந்த இடம் தெரியாமல், வாழும் விதமுளம் புரியாமல், வெறுமையாக முகவரியில்லாத கடிதங்களாக முடங்கிக் கிடக்கிறார்கள்.இளமை - கனவு பாசைறை: அன்று மார்டின் லூதர் கிங் சொன்னாரே ’எனக்கொரு கனவுண்டு’ என்று, கனவின் கருப்பையில் கருப்பின விடுதலையைத் தேடி அதை முழுவதும் அடைந்து வெற்றி கண்டாரே. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு கண்டார் அதனைச் சாதனையாக்கினார். எதிர் காலத்தைப் பற்றி கனவுகளை உருவாக்கிக் கொள்பவர்கள் தங்களுக்கென்று ஓர் இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடந்து சாதனைப் புரிகின்றனர்.ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வெற்றி இருக்கிறது என்றால அதற்குக் காரணம் அவன் எண்ணத்தில் கரு எடுத்த கனவேயாகும். அவ்வாறே ஒவ்வொரு சமூகத்தின் விடுதலையும் சில மாமனிதர்களின் எண்ணக்கருவின் கருப்பையில் உருவான கனவே என்பது அனைவரின் வாழ்வும் கூறும் சான்றுகள். இன்று மேதகு டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் ‘கனவுக்காண்கிறார்’. 2020தல் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று அதுமட்டுமா இளைஞர்களே கனவுக் காணுங்கள் என்று முழங்குகிறார் அவரின் ஆழ்மனத்தில் கரு எடுத்த கனவு இன்று நம்மையும் கனவுக் காண அழைக்கின்றது. “என்னைப் பொறுத்தவரையில் வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக இந்தியா மறுவடிவம் பெறுவதற்கான ஆற்றல் இளைஞர்களிடம் உள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை”. என்கிறார் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்.இளமை - வெல்லத்துடிக்கும்: எந்த நேரத்திலும் இயங்கத்துடிப்பது இளமை. விழிகளுக்குத் தெரியாமல் புதைந்து கிடப்பதைத் தோண்டிப் பார்க்கத் துடிப்பவனே சிகரத்தைத் தொடுகிறான். சிலரைக் கொள்கைகள் ஊக்கிவிக்கும், சிலரைச் செய் கைகள் ஊக்குவிக்கும். இளையோர் சாதிக்கக் கூடியவர்கள் திறமைமிக்கவர்கள், ஆற்றல் படைத்தவர்கள், நினைத்ததை நிறைவாக முடிக்கக் கூடியவர்கள், உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள், உண்மைக்கும் நீதிக்கும் சாட்சியம் சொல்பவர்கள், வரலாற்றையே வடிவமைப்பவர்கள். இன்று இந்தியா வெற்றியடைந்த, வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடுகிறது என்றால நமது இளம் தலை முறைகளின் இதயத்தில் ஏற்பட்ட தீப்பொறியாகிய கனவே காரணம். கணினி மென்பொருள்துறை, வணிகத்துறை, மேலாண்மைத்துறை, தொடர்பு சாதனைத்துறை விஞ்ஞானத்துறை, மருத்துவத்துறை. . . . இப்படி எல்லாத் துறைகளிலும் சாதனைப் புரியும் இளையத்தலைமுறையின் பெரும் சக்தியையும், ஆற்றலையும் , தன்னம்பிக்கையும் பாராட்டுவோம். இன்றும் இந்தியாவின் வளர்ச்சிககு கனவுகாண இளஞ்சிட்டுக்களுக்கு அழைப்புவிடுவோம்.இளமையை அழிக்கும் சக்திகள்: இன்று இளைஞர்களை அழிக்கும் சக்தியாக இருப்பவை வேலையில்லா திண்டாட்டமும், அரசியல் வாதிகள், பணமுதலைகளுக்கு அடியாட்களாக பயன்படும் அடிமத்தன எண்ணமுமாகும். கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள், இணையதளம், மற்றும் செல் இடைத் தொடர் பேச்சிற்கு அடிமையாதல், மேல்நாட்டுக கலாச்சாரம் ஆகியவற்றிறளகிடையே இளைஞர்களுக்கு இலட்சியப் பிடிப்பும், சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் அதிக மாகத் தேவைப்படுகிறது. இதைக் கொடுப்பதில் கல்வி நிறுவனங்கள் கலாச்சார அமைப்புகள், சமூகத்தொடர்புச் சாதனங்கள் ஆகியவை முனைப்போடு செயலாற்றுகின்றனள.தோல்விக்குள் புதைந்துள்ள மாபெரும் சக்திகள்: “வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான பல செயல்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் ஒரு செயலை வித்தியாசமான முறையில் செய்வார்கள்” இளமை என்னும் போதே இதயத்தில் விளைவது இனிமை, அதனுள் அடங்கியிருப்பது வலிமை. “பு லி கூடத் தயார் நிலையில் இல்லை என்றால்எலிகூட ஏறெடுத்துப் பார்க்காது”.என்பது முதுமொஒவ்வொரு இளைஞனும் தனிப்பட்ட ஆற்றல்களோடு பிறந்திருக்கிறான். உலகம் தட்டை அல்ல, உருண்டை தான் என்றதனால் கலிலியோவுக்கு விழுந்த கல்லெறிகள் எத்தனை? நிலவில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங் - அவருக்கு ஏற்பட்ட தடைக்கற்கள் ஒன்றா இரண்டா? ஓராயிரமல்லவா ஆனால் அவர் கால்கள் ஓய்ந்தனவா? மனம் மயங்கியதா? இல்லையே? சந்திரனைக் கண்டது மனித சக்தி சரித்திரத்தை மாற்றியது மனித சக்தி இந்திரன்தான் விண்ணாட்டின் அரசன் என்ற இலக்க ணத்தை மாற்றியது மனித சக்தி.ஒரு சின்னஞ்சிறிய விதை மண்ணுக்குள் புதைக்கப்படும் பொழுது செத்துவிடுவதில்லை புவியீர்ப்பு விசையையும் விஞ்சி அது மேலே தலை உயர்த்துகிறது. மரங்கள் எல்லாம் ஒற்றைக்கால் தவசிகள். தாம் மண்ணுக்குள்ளே இருக்கும் விதை மேலே அழுத்திக்கெண்டிருக்கும் கல் பாறை அனைத்தையும் மீறி வெயிலிலும், மழையிலும், காற்றிலும் முடங்கிவிடாது, ஒற்றைக் காலில் நின்று உய ர்வேன் என்று பிடிவாதமாக வளர்ந்து உயர்கிறது. ஆறறிவுபடைத்த இளைஞனே நீ ஓரறிவு படைத்த மரத்திற்கு முன்பு தோல்வியைத் தழுவலாமா? உள்முகமாகத் திரும்பட்டும். உனக்குள் தான் எத்தனை எத் தனை தொட்டனைத்தூறும் ஜீவ ஊற்றுக் கண் கள்! சிங்க இளைஞனே, திருப்பு முகம் திற விழி என்ற பாவேந்தர் அழைப்பு உனக்குள் கேட்கவில்i லயா?இளமையின் வேகம், விவேகம்: இளைஞர்களுக்கு விவேகம் இல்லாமல் வேகம் இருப்பதால் தான், அதை வீரம் என்று நினைத்து தங்களையும் அழித்துக்கொள்கிறார்கள், பிறரையும் கொல்லுகிறார்கள். வீரம் என்பது வன்முறையில் இறங்கிப் பிறரைப் காயப்படுத்துவதா? பேருந்துகளை உடைப்பதா? மாணவிகளை எரிப்பதா? சில்லறை விஷ்யத்திற்காக, சின்னப்பிரச்சினைக்காக மனம் துவண்டு போய் செத்துப் போவதா? குஜராத்தில் வீடுகளை எரித்ததும, அப்பாவிகளை கொன்றதும், பெண்களை கற்பழித்ததும் இளைஞர்கள் தானே. வீரத்திலேயும் விவேகம் வேண்டும். இளமையில் விதைத்ததைத் தான் வாழ்க்கையின் முதுமையில் அறுவடை செய்வோம். உனக்குள் இருக்கும் மாபெரும் சக்தியைக் கொண்டு ஆக்கத்தை உருவாக்கு, அழிவினை அகற்றிவிடு. விழித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எல்லாம் உழைத்துக் கொண்டே இருப்போம். நம் நாட்டை வளரும் நாடு என்னும் நிலையிலிருந்து ‘வளர்ந்த நாடு’ ஆக உருவாக்குவோம் தகுதியால், தன்னம்பிக்கையால், குறிக்கோளால், திட்டத்தால், உழைத்து, முன்னேறுவோம். ஒரு நாள் மூன்று இளைஞர்கள் முனிவரிடம் சென்றனர். அதில் ஒருவர் கையில் ஒரு பூச்சை வைத்துக் கெண்டு முனிவரிடம் கேட்டார். முனிவரே என்கையில் இருக்கும் பூச்சி உயி ருடன் இருக்கிறதா? இல்லை இறந்துள்ளதா? என்றார். அதற்கு முனிவர் கூறனார் கையில் இருக்கும் பூச்சியானது உயிரோடு இருப்பதும், இறந்து இருப்பதும் உன கையில் தான் உள்ளது என்றார் முனிவர். இது ஒரு சிறுகதையாயினும் நமது இளைஞர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறது. நமது நாட்டின் வளர்ச்சி இன்றைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்களின் புதிய, புதிய கனவுகளும் கண்டுபிடிப்புகளும், தேடல்களும் தான் இந்திய வளர் ச்சியின் ஏணிப்படிகளாக உள்ளன. நம்பிக்கை என்பது உள்ளே நிகழும் உயிர்ச்சுவாசம் இளைய செடி களுக்கு இது ஒரு தாரக மந்திரம், விரக்தி, சலிப்பு, ஏமாற்றம் இவையனைத்தும் காற்றில்எழும் தூசிகளே நெப்போலியன் ஹூல் என்பவர் “என்னுடைய மனதில்தோன்றும் நம்பிக்கைகளே ஒரு நோக்கத்தை அடையக் காரணமாய் இருக்கின்றன” என்கிறார். இளைஞர் எண்ணத்தில் எது கருவின் கனவாக உருவெடுக்கிறதோ. அதுவே செயலாக உருவெடுத்து, கடினமாக உழைக்கச செய்கிறது. அதன் விளைவால் ஏற்படும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் சாதனையின் உச்சிக்கு அழைத்து செல்கின்றன. நாட்டையும் வளர்ச்சிப பாதைக்கு அழைத்துச் செல்கின்றன.

Friday, February 3, 2006

நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்

சுகி.சிவம் பேச்சு
- பொன்ராஜ் -

பேச்சுபள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரும், படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களும் சாரைசாரையாய் ஆஜராக, இராஜபாளையம் பி.ஸ்.கே. நூற்றாண்டு விழா திருமண மண்டபமே நிரம்பி வழிந்தது.ஸ்கோப் 2005 என்ற பெயரில் இராஜபாளையம் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாணவ, மாணவவியருக்கான வேலை வழிகாட்டி நிகழ்ச்சியின் ஸ்பாட் தான் இந்த பி.ஸ்.கே. திருமண மண்டபம்.நுழைவுக் கட்டணம் ஐம்பது ரூபாய் என்றாலும் காற்று புக முடியாத அளவுக்கு அரங்கத்தில் கூட்டம் அலைமோத காரணம் இருந்தது.அது -சுகி.சிவம்.பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தககள், ஒலிநாடாக்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், தன்னம்பிக்கை உரைகள் என வெவ்வேறு தளங்களில் தனது சொல்லாற்றலால் வெற்றிக் கொடி நாட்டி வரும் சு.கி. சிவத்தின் உரைக்காக மாணவர்கள் தவம் கிடக்க வேண்டியதாயிற்று. 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கடைசிவரை கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள விழாக் குழவினார் நிகழ்ச்சி நிரலில் கடைசியாக சுகி. சிவத்தின் உரையை போட்ட டெக்னிக்தான் மாணவர்கள் காலை முதல் மாலைவரை மாதவம் செய்யக் காரணமாயிற்று.காலை தொடங்கி மாலை வரை ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர்.வி. வெங்கட்ராமன் (வெற்றிக்கு ஏழு படிகள்), இதயம் முத்து (சுயதொழில் மந்திரம்) சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) ராமச்சந்திரன் (உன்னால் முடியும் தம்பி) பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி (நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?) ஆகியோர் கலக்கலாய் உரையாற்றி அமர்ந்து விட பொன் மாலைப் பொழுதில் தன் உரையை தொடகினார் ----. வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் மனிதர் சென்னை வெள்ளம் போல் பின்னி எடுத்துவிட்டார்.கை தட்டல் மழை பொழிந்த மாணவ மாணவியருக்கு அவரது கருத்துக்கள் ஒவ்வொன்றும் பூஸ்ட். அசரவைத்த உரையிலிருந்து...வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பினை இங்கே பார்க்கிறேன். நீங்கள் எந்தக் கைகளை தட்டினீர்களோ அந்தக் கைகளில்தான் இந்தியாவை மாற்றக்கூடிய சக்தி உள்ளது என்பதை உங்களுக்கு புரிய வைத்துவிட்டால் என் வேலை முடிந்துவிடும்.எப்போதும் அடுத்தவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்காதீர்கள், உங்களை நீங்களே அங்கீகரியுகள். உலகே முதலில் பாரதியின் கவிதையினை புறக்கணித்த போது தமிழ்நாட்டுக்கு கவியரசர் இல்லை என்ற பழி என்னால் போகும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினானே அந்த தன்னனம்பிக்கைதான் அவனை வாழ வைத்தது. மற்றவர்களின் அபிப்பிராயங்களல்ல.தாழ்வு மனப்பான்மையை தள்ளி விடுங்கள். உலகப்பேரழகியை கூட மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் அவள் கன்னங்கள் மேடு பள்ளமாகத்தான் இருக்கும்.நீங்கள் அழகின்றி படைக்கப்பட்டதாக நினைத்தால் அதற்கு வெட்கப்பட வேண்டியது நீங்களல்ல., ஆண்டவன்தான்.கறுப்பாக இருப்பதால் கவலைப்படாதீர்கள். நம் பாட்டி,பாட்டன் எல்லாம் உழைத்த பரம்பரை என்பதால்தான் நாம் கறுப்பு. அதற்காக நாம் பெருமைப்பட அல்லவா வேண்டும். எப்படி படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அதை கொண்டாடுங்கள்.புடித்த குடும்பத்தில் இருந்து படித்தவன் வருவதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.படிக்காத குடும்பத்தில் இருந்து படித்து வருகிற நீ அதற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர சிறுமைப்படக் கூடாது.மாற்ற முடியாதபடி இருக்கின்றவற்றை மாற்றுவதில் தான் உங்கள் வெற்றி உள்ளது. ஆங்கிலம் பிழையின்றி பேசுங்கள், திருத்திக் கொள்ளலாம். பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். காந்திஜி, விவேகானந்தர் கூட ஆங்கிலத்தை பிழையோடு எழுதியவர்கள்தான்.வாத்தியாரைப் பார்த்து ரொம்பவும் பயப்படாதீர்கள். ஆவர் நமக்கு முந்தைய செட் அவ்வளவுதான். கிரிக்கெட் ஒரு கீதா உபதேசமென நான் எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் ஆட ஒருவன் களத்தில் இறங்கினால் அவனை அவுட் ஆக்க பல பேர் இருப்பார்கள். வாழ்க்கையிலும் அப்படித்தான்.சாராயக்கடைகளால் ஆண்கள் முட்டாளாகிப் போனது போல தமிழ்நாட்டுப் பெண்கள் சீரியல்களினால் முட்டாளாகிப் போனார்கள்.இப்படிப்பட்ட பெற்றோரை மன்னியுங்கள். அவர்களின் தோல்வியை சொல்லிக் கொண்டே நீங்களும் தோற்றுப் போகாதீர்கள்.எவ்வளவு படிக்க முடியுமோ படியுங்கள். எவ்வளவு மொழி உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு பலசாலி நீங்கள்.நான் ஒரு கதை சொல்வதுண்டு. திருவள்ளுவர் தாமரையின் உயரம் என்ன? என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அவன் தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம் என்றான். அடுத்த கேள்வியைக் கேட்டார் உன் உயரம் என்ன? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளித்தால் எதையும் வெல்லலாம். வாழ்க்கையில் நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்தான்.ஆரவார கைதட்டலோடு விழா முடிந்ததும் கிளம்பிய மாணவர்களுள் ஒருவன் சொல்லிச் சென்றான். இனிமேல் ஒழுங்கா தினமும் படிக்கணும்.இவ்விழாவின் வெற்றியை போல கலந்து கொண்ட மாணவர்களுக்கும் இனி வெற்றி நிச்சயம்தான்.